أَلَمْ نَشْرَحْ لَكَ صَدْرَكَ﴿١﴾
நாம், உம் இதயத்தை உமக்காக விரிவாக்கவில்லையா?
وَوَضَعْنَا عَنكَ وِزْرَكَ﴿٢﴾
மேலும், நாம் உம்மை விட்டும் உம் சுமையை இறக்கினோம்.
ٱلَّذِىٓ أَنقَضَ ظَهْرَكَ﴿٣﴾
அது உம் முதுகை முறித்துக் கொண்டுடிருந்தது.
وَرَفَعْنَا لَكَ ذِكْرَكَ﴿٤﴾
மேலும், நாம் உமக்காக உம்முடைய புகழை மேலோங்கச் செய்தோம்.
فَإِنَّ مَعَ ٱلْعُسْرِ يُسْرًا﴿٥﴾
ஆதலின் நிச்சயமாகத் துன்பத்துடன் இன்பம் இருக்கிறது.
إِنَّ مَعَ ٱلْعُسْرِ يُسْرًا﴿٦﴾
நிச்சயமாக துன்பத்துடன் இன்பம் இருக்கிறது.
فَإِذَا فَرَغْتَ فَٱنصَبْ﴿٧﴾
எனவே, (வேலைகளிலிருந்து) நீர் ஓய்ந்ததும் (இறைவழியிலும், வணக்கத்திலும்) முயல்வீராக.
وَإِلَىٰ رَبِّكَ فَٱرْغَب﴿٨﴾
மேலும், முழு மனத்துடன் உம் இறைவன் பால் சார்ந்து விடுவீராக.