89 · Makkī

الفجر

Al-Fajr·The Dawn

✦ memorize this sūrah

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ

  1. وَٱلْفَجْرِ﴿١﴾

    விடியற் காலையின் மீது சத்தியமாக,

  2. وَلَيَالٍ عَشْرٍ﴿٢﴾

    பத்து இரவுகளின் மீது சத்தியமாக,

  3. وَٱلشَّفْعِ وَٱلْوَتْرِ﴿٣﴾

    இரட்டையின் மீதும், ஒற்றையின் மீதும் சத்தியமாக,

  4. وَٱلَّيْلِ إِذَا يَسْرِ﴿٤﴾

    செல்கின்ற இரவின் மீதும், சத்தியமாக,

  5. هَلْ فِى ذَٰلِكَ قَسَمٌ لِّذِى حِجْرٍ﴿٥﴾

    இதில் அறிவுடையோருக்கு (போதுமான) சத்தியம் இருக்கிறதல்லவா?

  6. أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِعَادٍ﴿٦﴾

    உம்முடைய இறைவன் ஆ(து கூட்டத்)தை என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா?

  7. إِرَمَ ذَاتِ ٱلْعِمَادِ﴿٧﴾

    (அவர்கள்) தூண்களையுடைய 'இரம்' (நகர) வாசிகள்,

  8. ٱلَّتِى لَمْ يُخْلَقْ مِثْلُهَا فِى ٱلْبِلَٰدِ﴿٨﴾

    அவர்கள் போன்ற ஒரு சமுதாயம் எந்த நாடுகளிலும் படைக்கப்படவில்லை.

  9. وَثَمُودَ ٱلَّذِينَ جَابُوا۟ ٱلصَّخْرَ بِٱلْوَادِ﴿٩﴾

    பள்ளத்தாக்குகளில் பாறைகளைக் குடைந்(து வசித்து வந்)த ஸமூது கூட்டத்தையும் (என்ன செய்தான் என்று பார்க்கவில்லையா?)

  10. وَفِرْعَوْنَ ذِى ٱلْأَوْتَادِ﴿١٠﴾

    மேலும், பெரும் படைகளைக் கொண்ட ஃபிர்அவ்னையும் (உம் இறைவன் என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா?)

  11. ٱلَّذِينَ طَغَوْا۟ فِى ٱلْبِلَٰدِ﴿١١﴾

    அவர்களெல்லாம் நாடுகளில் வரம்பு மீறி நடந்தனர்.

  12. فَأَكْثَرُوا۟ فِيهَا ٱلْفَسَادَ﴿١٢﴾

    அன்றியும், அவற்றில் குழப்பத்தை அதிகப்படுத்தினர்.

  13. فَصَبَّ عَلَيْهِمْ رَبُّكَ سَوْطَ عَذَابٍ﴿١٣﴾

    எனவே, உம்முடைய இறைவன் அவர்கள் மேல் வேதனையின் சாட்டையை எறிந்தான்.

  14. إِنَّ رَبَّكَ لَبِٱلْمِرْصَادِ﴿١٤﴾

    நிச்சயமாக, உம்முடைய இறைவன் கண்காணித்துக் கொண்டு இருக்கிறன்றான்.

  15. فَأَمَّا ٱلْإِنسَٰنُ إِذَا مَا ٱبْتَلَىٰهُ رَبُّهُۥ فَأَكْرَمَهُۥ وَنَعَّمَهُۥ فَيَقُولُ رَبِّىٓ أَكْرَمَنِ﴿١٥﴾

    ஆனால், இறைவன் மனிதனுக்கு கண்ணியப்படுத்தி, பாக்கியம் அளித்து அவனைச் சோதிக்கும் போது அவன்; "என் இறைவன் என்னை கண்ணியப்படுத்தியுள்ளான்" என்று கூறுகிறான்.

  16. وَأَمَّآ إِذَا مَا ٱبْتَلَىٰهُ فَقَدَرَ عَلَيْهِ رِزْقَهُۥ فَيَقُولُ رَبِّىٓ أَهَٰنَنِ﴿١٦﴾

    எனினும் அவனுடைய உணவு வசதிகளைக் குறைத்து, அவனை (இறைவன்) சோதித்தாலோ, அவன், "என் இறைவன் என்னைச் சிறுமைப் படுத்தி விட்டான்" எனக் கூறுகின்றான்.

  17. كَلَّا بَل لَّا تُكْرِمُونَ ٱلْيَتِيمَ﴿١٧﴾

    அப்படியல்ல! நீங்கள் அநாதையைக் கண்ணியப்படுத்துவது இல்லை.

  18. وَلَا تَحَٰٓضُّونَ عَلَىٰ طَعَامِ ٱلْمِسْكِينِ﴿١٨﴾

    ஏழைக்கு உணவளிக்குமாறு தூண்டுவதில்லை.

  19. وَتَأْكُلُونَ ٱلتُّرَاثَ أَكْلًا لَّمًّا﴿١٩﴾

    இன்னும் (பிறருடைய) அநந்தரச் சொத்துக்களையும் (சேர்த்து) உண்டு வருகின்றீர்கள்.

  20. وَتُحِبُّونَ ٱلْمَالَ حُبًّا جَمًّا﴿٢٠﴾

    இன்னும், பொருளை அளவு கடந்து பிரியத்துடன் நேசிக்கின்றீர்கள்.

  21. كَلَّآ إِذَا دُكَّتِ ٱلْأَرْضُ دَكًّا دَكًّا﴿٢١﴾

    அப்படியல்ல! பூமி தூள் தூளாகத் தகர்க்கப்படும் போது,

  22. وَجَآءَ رَبُّكَ وَٱلْمَلَكُ صَفًّا صَفًّا﴿٢٢﴾

    உம்முடைய இறைவனும், வானவரும் அணியணியாக வரும்போது,

  23. وَجِا۟ىٓءَ يَوْمَئِذٍۭ بِجَهَنَّمَ يَوْمَئِذٍ يَتَذَكَّرُ ٱلْإِنسَٰنُ وَأَنَّىٰ لَهُ ٱلذِّكْرَىٰ﴿٢٣﴾

    அந்நாளில் நரகம் முன் கொண்டு வரப்படும் போது - அந்நாளில் மனிதன் உணர்வு பெறுவான்; அந்த (நாளில்) உணர்வு (பெறுவதினால்) அவனுக்கு என்ன பலன்.

  24. صفحة ٥٩٤
  25. يَقُولُ يَٰلَيْتَنِى قَدَّمْتُ لِحَيَاتِى﴿٢٤﴾

    "என் (மறுமை) வாழ்க்கைக்காக நன்மையை நான் முற்படுத்தி (அனுப்பி)யிருக்க வேண்டுமே!" என்று அப்போது மனிதன் கூறுவான்.

  26. فَيَوْمَئِذٍ لَّا يُعَذِّبُ عَذَابَهُۥٓ أَحَدٌ﴿٢٥﴾

    ஆனால் அந்நாளில் (அல்லாஹ் செய்யும்) வேதனையைப் போல், வேறு எவனும் வேதனை செய்யமாட்டான்.

  27. وَلَا يُوثِقُ وَثَاقَهُۥٓ أَحَدٌ﴿٢٦﴾

    மேலும், அவன் கட்டுவது போல் வேறு எவனும் கட்டமாட்டான்.

  28. يَٰٓأَيَّتُهَا ٱلنَّفْسُ ٱلْمُطْمَئِنَّةُ﴿٢٧﴾

    (ஆனால், அந்நாளில் நல்லடியார்களிடம்) சாந்தியடைந்த ஆத்மாவே!

  29. ٱرْجِعِىٓ إِلَىٰ رَبِّكِ رَاضِيَةً مَّرْضِيَّةً﴿٢٨﴾

    நீ உன்னுடைய இறைவன்பால் திருப்தி அடைந்த நிலையிலும், (அவன்) உன்மீது திருப்தியடைந்த நிலையிலும் மீளுவாயாக.

  30. فَٱدْخُلِى فِى عِبَٰدِى﴿٢٩﴾

    நீ என் நல்லடியார்களில் சேர்ந்து கொள்வாயாக.

  31. وَٱدْخُلِى جَنَّتِى﴿٣٠﴾

    மேலும், நீ என் சுவர்க்கத்தில் பிரவேசிப்பாயாக (என்று இறைவன் கூறுவான்).

Quran Translation Name: ஜான் டிரஸ்ட் Translator: Jan Turst Foundation Language: Tamil ID: ta.tamil Last Update: August 16, 2010 Source: Tanzil.net

Play surah